சார்ஸ்: தமிழக விமான நிலையங்களில் இலவச முகமூடிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சார்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்தவக் கல்வி இயக்குநர் டாக்டர் ரவீந்திரநாத் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற மகளிர் சர்வதேச மாநாட்டில் டாக்டர் ரவீந்திரநாத் பேசுகையில்,

சார்ஸ் நோயால் பாதிக்கப்படுபவர்களைச் சேர்ப்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுமருத்துவமனைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதற்காகத் தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சார்ஸ் நோய் கண்டறிவதற்கானபரிசோதனைகளின்போது ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் (க்ண்ஞு ச்ணஞீ ணாடணூணிதீ) கருவிகள்மட்டும் தான் உபயோகப்படுத்தப்படும்.

மேலும் சார்ஸ் நோய் பரவாமல் தடுக்கும் முகமூடிகள் தற்போது விமான நிலையம் மற்றும்துறைமுகங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. விரைவில் இவற்றை இலவசமாகத் தரவும்ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார் டாக்டர் ரவீந்திரநாத்.

சுகாதார அமைச்சர்கள் மாநாடு:

இதற்கிடையே சார்ஸ் நோய் தொடர்பாக விவாதிப்பதற்காக சார்க் நாடுகளின் சுகாதாரஅமைச்சர்களின் மாநாடு ஒன்று நாளை மாலத் தீவில் நடைபெறுகிறது.

சார்ஸ் நோய் பரவுவதைத் தடுப்பது எப்படி என்பது குறித்து இந்த மாநாட்டின்போது விவாதிக்கப்படஉள்ளது.

இந்தியா சார்பில் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் ராஜா இம்மாநாட்டில் கலந்துகொள்கிறார். இதற்காக மாலத் தீவு செல்லும் வழியில் சென்னை வந்த அவர் நிருபர்களிடம்பேசுகையில்,

இந்தியாவில் இதுவரை 10 பேருக்கு சார்ஸ் இருப்பதாக கண்டறியப்பட்டு, 7பேருக்கு அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சார்ஸ் நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், குணப்படுத்துவது எளிது. எனவே மக்கள்பீதியடையத் தேவையில்லை.

மாநில அரசுகள் விழிப்புடன் இருந்து இந்நோயைத் தடுக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.இருப்பினும் மாநில அரசுகள் கோரும் எந்த உதவியையும் செய்ய மத்திய அரசு தயாராகவே உள்ளதுஎன்றார் ராஜா.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+