கருணாநிதியை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்த அழகிரி, ஸ்டாலின்
கோயம்புத்தூர்:
திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருடைய மகன்கள்அழகிரியும், ஸ்டாலினும் கோயம்புத்தூருக்கு விரைந்து சென்று நேரில் அவருடைய உடல் நலம்குறித்து விசாரித்தனர்.
கோயம்புத்தூரில் நடைபெற்ற "தொல்காப்பியப் பூங்கா" வெளியீட்டு விழாவின்போதுகருணாநிதிக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார். சுமார் 3 மணி நேரம் சிகிச்சைக்குப் பின்னர் அவர் அங்கு தங்கியிருந்த லாட்ஜுக்குத்திரும்பினார்.
இதற்கிடையே திமுக இளைஞரணிச் செயலாளருமான ஸ்டாலின் மற்றும் மதுரையில் உள்ள அழகிரிஆகியோருக்கு கருணாநிதி உடல் நலம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மதுரையிலிருந்து கோயம்புத்தூருக்கு வந்த அழகிரி நேற்று காலை சுமார் 11.30மணிக்கு கருணாநிதியைச் சந்தித்து அவருடைய உடல் நலம் குறித்து விசாரித்தார். அழகிரியைப்பார்த்து புன்னகைத்த கருணாநிதி, தன் கையில் மகள் கனிமொழியின் மகனை வைத்துக் கொஞ்சிக்கொண்டிருந்தார்.
உடனே கனிமொழியின் மகனைத் தானும் கையில் வாங்கிக் கொஞ்சி மகிழ்ந்தார் அழகிரி. இதைக்கருணாநிதி பார்த்து ரசித்தார்.
இதற்கிடையே ராணி மேரி கல்லூரி விவகாரம் தொடர்பாகக் கைதாகி ஜாமீனில் வெளியாகியிருந்தஸ்டாலின், நேற்று காலை சென்னை-வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் கையெழுத்துப் போட்டஉடனே விமானம் மூலம் கோயம்புத்தூருக்குக் கிளம்பி வந்து சேர்ந்தார்.
நேற்று பிற்பகல் சுமார் 1 மணிக்கு கருணாநிதியைச் சந்தித்து அவருடைய உடல் நலம் குறித்துவிசாரித்தார். அதேபோல் கருணாநிதியின் மகள் செல்வியும் கோயம்புத்தூர் வந்து அவருடையஉடல் நலம் குறித்து விசாரித்தார்.
கருணாநிதியை நேரில் சந்திப்பதற்காக கோயம்புத்தூர் வந்தபோதிலும் ஸ்டாலினும் அழகிரியும்ஒருவரையொருவர் நேரில் சந்தித்துக் கொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-->