For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காய்கறிகள் விலை இன்னும் குறையவில்லை: மக்கள் அதிருப்தி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

லாரிகள் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்ட பிறகும் கூட சென்னை நகரில் காய்கறிகள் விலை சற்றும்குறையாததால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

சமீபத்தில் லாரி உரிமையாளர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தம் காரணமாக காய்கறி விலைகள்ராக்கெட் வேகத்தில் உயர்ந்தன. லாரிகள் மீண்டும் ஓடத் தொடங்கினால்தான் காய்கறிகள் விலைகுறையும் என்று கூறப்பட்டது.

ஆனால் ஸ்டிரைக் முடிந்து கிட்டத்தட்ட 4 நாட்கள் ஆகியும் கூட காய்கறிகளின் விலைஅப்படியேதான் உள்ளது. இதனால் சென்னை மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய அண்டை மாவட்டங்களிலிருந்துதான் சென்னைநகருக்கு காய்கறிகள் வருகின்றன. அதேபோல, ஆந்திரா, கர்நாடகம் போன்ற மாநிலங்களிலிருந்துதக்காளி போன்ற சில பழங்கள் வருகின்றன.

இவற்றின் விளைச்சல் அங்கு தற்போது குறைவாக இருப்பதால் காய்கறிகள், கனிகள் வரத்துகுறைந்துள்ளது. இதனால் விலை அப்படியே இருப்பதாக கோயம்பேடு மொத்த வியாபாரிகள்தெரிவிக்கின்றனர்.

தற்போதைய காய்கறி விலை நிலவரம்: கேரட் - கிலோவுக்கு ரூ.10 முதல் 12 வரை, பீட்ரூட் - ரூ.7வரை, தக்காளி - ரூ.15 வரை, பெரிய வெங்காயம் - ரூ.10 வரை, உருளைக் கிழங்கு - ரூ.10 வரைவிற்கப்படுகின்றன. ஒரு ஆப்பிள் ரூ.15க்கும், ஒரு டஜன் வாழைப்பழம் ரூ.20 வரையும்விற்கப்படுகின்றன.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X