ரிப்பன் கட்டடத்தில் உண்ணாவிரத முயற்சி: 11 காங்கிரஸ் கவுன்சிலர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தனி அறை கேட்டு உண்ணாவிரதம் இருக்க முயன்ற 11காங்கிரஸ் கவுன்சிலர்களைப் போலீசார் கைது செய்தனர்.

சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் கட்டட வளாகத்தில் காங்கிரஸ்கவுன்சிலர்களுக்குத் தனி அறை ஒதுக்க வேண்டும் என்று கோரி 11 காங்கிரஸ் கவுன்சிலர்களும்நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக துணை மேயர் கராத்தே தியாகராஜன், கமிஷனர் கலைவாணன் ஆகியோருக்குகோரிக்கை கடிதமும் அனுப்பியிருந்தனர். ஆனால் இதுவரை ஒரு நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இதைத் தொடர்ந்து இன்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக காங்கிரஸ் கவுன்சிலர்கள்கூறியிருந்தனர். அதன்படி காலையில் அவர்கள் ரிப்பன் கட்டடவளாகத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர்.

இதையடுத்து அனுமதியில்லாமல் உண்ணாவிரதம் இருக்க முயன்றதாக கூறி 11 பேரையும் சிலகாங்கிரஸ் தொண்டர்களையும் போலீஸார் கைது செய்து, பெரியமேடு காவல் நிலையத்திற்குக்கொண்டு சென்றனர்.

சோ.பா. கண்டனம்:

இந்நிலையில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் கைதுக்கு காங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சி படுமோசமாக உள்ளது. தனிஅறை கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால்தான் அறவழியில் உண்ணாவிரதம் இருக்க காங்கிரஸ் கவுன்சிலர்கள் முடிவு செய்தனர்.ஆனால் அவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். கைதுசெய்தாலும் தொடர்ந்து போராட்டம்நடைபெறும் என்று தன் அறிக்கையில் கூறியுள்ளார் சோ.பா.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+