"சிங்காரச் சென்னை"யில் மாடுகள் வளர்க்கத் தடை!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகரில் மாடுகள் வளர்க்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.
ஊராட்சித் துறை மானியக் கோரிக்கையை அத்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் இன்று சட்டசபையில்தாக்கல்செய்து பேசினார். அவர் பேசுகையில்,
மாடுகளை வளர்ப்போர் அமைத்திருக்கும் மாட்டுக் கொட்டகைகளிலிருந்து வெளியாகும் கழிவுப்பொருட்கள் மழை நீர் வடிகால் அமைப்புகள் மற்றும் குடிநீர் இணைப்புகளுக்குச் சென்று அவற்றைஅடைத்து விடுகின்றன.
மேலும் நோய்களை ஏற்படுத்தும் கொசுக்கள், ஈக்கள் பரவவும் மாடுகள் முக்கியக் காரணமாகஉள்ளன. சாலைகளிலும் மாடுகள் சரளமாக திரிவதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.
இதனால் சென்னை நகருக்குள் மாடுகளை வளர்க்கத் தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவுஉடனடியாக அமலுக்கு வருகிறது என்றார் சம்பத்.
-->












Click it and Unblock the Notifications