வேலூர் கொலைகள் எதிரொலி: ஸ்ரீவில்லிபுத்தூரில் நகைக் கடைகள் அடைப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்:
வேலூரில் கடந்த வாரம் நகைக் கடை அதிபர் உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்டு, நகைகள்கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நகைக் கடைஉரிமையாளர்கள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
கடந்த வாரம் வேலூரில் உள்ள ஒரு நகைக் கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் நகைக் கடைஉரிமையாளர் மற்றும் ஊழியர் ஆகியோரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு நகைகளைஎடுத்துக் கொண்டு தப்பி விட்டனர்.
மேலும் வழியில் ஒரு ஆசிரியரையும் சுட்டுக் கொன்றுவிட்டு அவருடைய பைக்கில் ஏறித் தப்பிஓடினர் கொள்ளையர்கள்.
தமிழகத்தையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக இன்னும் யாரும்கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் வேலூர் கொலை, கொள்ளைச் சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் எதிரொலித்துள்ளது.இச்சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாக அவ்வூரில் உள்ள நகைக் கடை உரிமையாளர்கள் இன்றுகடை அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நகைக் கடை பஜார் இன்று வெறிச்சோடிக் காணப்பட்டது.அனைத்து நகைக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
நகைக் கடை அதிபர்களுக்கும், ஊழியர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்என்றும் போராட்டம் நடத்தியவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-->