பிருத்வி ஏவுகணை வெற்றிகரமாய் சோதனை
பலசூர் (ஒரிசா):
இந்திய ஏவுகணையான "பிருத்வி" இன்று வெற்றிகரமாக ஏவி பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது.
இந்திய ராணுவமும், டி.ஆர்.டி.ஓ. நிறுவனமும் இணைந்து இன்று காலை 11.27 மணிக்கு ஒரிசாவில்உள்ள சந்திப்பூர் சோதனைத் தளத்தில் இந்தச் சோதனையை நடத்தின.
8.56 மீட்டர் நீளம் கொண்ட பிருத்வி ஏவுகணை இன்று ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே இலக்கைச்சென்று வெற்றிகரமாகத் தாக்கியது.
பிருத்வி சுமார் 150 முதல் 250 கி.மீ. தொலைவிற்குச் சென்று தாக்கும் திறன் கொண்டது. ஏற்கனவேஇந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள பிருத்வி ஏவுகணை, இந்திய விமானப் படை மற்றும்கடற்படை ஆகியவற்றிலும் சேர்க்கப்படும் வகையில் அதில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
சுமார் 4.6 டன் எடையுள்ள வெடிபொருட்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட பிருத்வி ஏவுகணைமுதல் முறையாகக் கடந்த 1988ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி பரிசோதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications