பரிதி எம்.எல்.ஏ. வெற்றி செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை:
சென்னை எழும்பூர் தொகுதியில் திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி வெற்றி பெற்றது செல்லும்என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பில் எழும்பூர்தொகுதியில் போட்டியிட்டார் பரிதி.
அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட தமிழக முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் 86 வாக்குகள் வித்தியாசத்தில் பரிதியிடம் தோல்வி அடைந்தார்.
பரிதியின் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஜான் பாண்டியன் வழக்கு தொடர்ந்தார்."எழும்பூர் தொகுதியில் பல வாக்குச் சாவடிகளை பரிதி கைப்பற்றியதால்தான் அவரால் வெற்றி பெறமுடிந்தது. இல்லையென்றால் நான் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாகி இருப்பேன்" என்று தன் மனுவில்தெரிவித்திருந்தார் ஜான் பாண்டியன்.
இம்மனுவை விசாரித்து உயர் நீதிமன்ற நீதிபதி தங்கவேல் இன்று தீர்ப்பு வழங்கினார். அவர் தன்தீர்ப்பில்,
ஜான் பாண்டியனின் புகார் தொடர்பாக எந்தவிதமான ஆதராமும் இல்லை. எனவே அவர் மனுவைத்தள்ளுபடி செய்கிறேன். எழும்பூர் தொகுதியில் பரிதி வெற்றி பெற்றது செல்லும் என்றும்அறிவிக்கிறேன்.
மேலும் இவ்வழக்கு தொடர்பாக பரிதிக்கு ஏற்பட்டுள்ள செலவை ஈடு கட்ட அவருக்கு ஜான்பாண்டியன் ரூ.2,000 அபராதமாக வழங்க வேண்டும் என்று நீதிபதி தங்கவேல் உத்தரவிட்டார்.
இவ்வழக்கு தொடர்பாக பரிதி இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். கொலை வழக்குதொடர்பாக ஆயுள் தண்டனை பெற்றுள்ள ஜான் பாண்டியன் கோயம்புத்தூர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளதால் அவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை.
-->












Click it and Unblock the Notifications