லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட அதிகாரியின் மனைவிக்கு ஜெ. நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மணல் திருடர்களால் லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட வருவாய் ஆய்வாளரின் மனைவியிடம்ரூ.5லட்சம் இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை முதல்வர்ஜெயலலிதா வழங்கினார்.
காஞ்சிபுரம் அருகே சண்முகசுந்தரம் என்ற வருவாய்ஆய்வாளர் கடந்த வாரம் பாலாற்றில்திருட்டுத்தனமாக மணல் எடுத்துக் கொண்டிருந்தவர்களைத் தடுக்கமுயன்றார். அப்போது அவர்களில் ஒருவன் சண்முகசுந்தரத்தை லாரியால் ஏற்றிக் கொன்று விட்டான்.
இந்தச் சம்பவத்தையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளியைக் கைது செய்துலாரியையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் சண்முகசுந்தரத்தின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்றுஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அதன்படி நேற்று தலைமைச் செயலகத்திற்கு சண்முகசுந்தரத்தின் மனைவி சுலோச்சனாவரவழைக்கப்பட்டார். அவரிடம் ரூ.5லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் ஜெயலலிதா.
-->












Click it and Unblock the Notifications