மே 4 வரை சென்னை-சிங்கப்பூர் ஏர்-இந்தியா விமானங்கள் ரத்து
சென்னை:
பைலட்டுகள் பிரச்சனை காரணமாக சென்னை-சிங்கப்பூர் இடையே வரும் மே 4ம் தேதி வரைஅனைத்து ஏர்-இந்தியா விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சார்ஸ் நோய் பரவியுள்ள நாடுகளுக்குச் செல்ல மாட்டோம் என்பதை வலியுறுத்தி ஏர்-இந்தியாபைலட்டுகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சார்ஸ் பரவியுள்ள நாடுகளுக்குச் சென்றுவந்துள்ள விமான ஊழியர்கள் தங்களுடன் விமானத்தில் வரக் கூடாது என்றும் அவர்கள்கூறியுள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட பைலட்டுகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் உலகம் முழுவதும்செல்ல வேண்டிய பல ஏர்-இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று காலை கடைசிநேரத்தில் சென்னை-சிங்கப்பூர் இடையே 2 ஏர்-இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்நிலையில் பைலட்டுகள் பிரச்சனை மேலும் தீவிரமாகியுள்ளதைத் தொடர்ந்து மே 4ம் தேதி வரைசென்னை-சிங்கப்பூர் இடையிலான அனைத்து ஏர்-இந்தியா விமானங்களும் ரத்து செய்யப்படுவதாகஅந்நிறுவனம் அறிவித்துள்ளது.
சிங்கப்பூர் தவிர சென்னையிலிருந்து வேறு சில நாடுகளுக்குச் செல்லும் ஏர்-இந்தியாவிமானங்களும் மே 4ம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.
கை கொடுத்த இந்தியன் ஏர்லைன்ஸ்:
ஏர்-இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து சென்னை-சிங்கப்பூர் இடையேஇந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை சிங்கப்பூரிலிருந்து ஏர்-இந்தியா விமானத்தில் வரவேண்டிய 311 பயணிகள்இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னைக்கு வந்து சேர்ந்தனர்.
சிங்கப்பூர் தவிர வேறு பல தெற்காசிய நாடுகளுக்கும் விமானங்களை இயக்கி வரும் இந்தியன்ஏர்லைன்ஸ் பைலட்டுகள், சிங்கப்பூரில் மட்டும் எந்தக் காரணத்தைக் கொண்டும் இரவில் தங்கமாட்டோம் என அறிவித்துள்ளனர். இதை இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் ஏர்-இந்தியா விமான பைலட்டுகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாகக்கூறியுள்ள இந்தியன் ஏர்லைன்ஸ் பைலட்டுகள், ஆனால் போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம்என அறிவித்துள்ளனர்.
மேலும் 18 பைலட்டுகள் சஸ்பெண்ட்:
இதற்கிடையே மேலும் 18 பைலட்டுகளை ஏர்-இந்தியா நிறுவனம் சஸ்பெண்ட் செய்துள்ளது.இதையடுத்து ஏர்-இந்தியா நிறுவனம் சஸ்பெண்ட் செய்துள்ள பைலட்டுகளின் எண்ணிக்கை 45ஆகஅதிகரித்துள்ளது.
-->












Click it and Unblock the Notifications