மதுரையில் கர்ப்பிணி டாக்டர் தற்கொலை
மதுரை:
மதுரையில் கர்ப்பிணி டாக்டர் ஒருவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை சிங்கராயர் காலனியில் வசித்து வந்தவர் சித்த மருத்துவ டாக்டர் மலர்விழி. இவருக்கும்டாக்டர் சிவகடாட்சம் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்குமுன் திருமணம் நடந்தது.
இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் டாக்டர் சிவகடாட்சம் வெளியே சென்றிருந்தபோது டாக்டர் மலர்விழி மட்டும் வீட்டில்தனியாக இருந்தார். அவர் 2 மாத கர்ப்பமாகவும் இருந்தார்.
பின்னர் டாக்டர் சிவகடாட்சம் வீடு திரும்பியபோது வாயில் நுரை தள்ளிய நிலையில் டாக்டர்மலர்விழி தரையில் விழுந்து கிடந்தார். இதையடுத்து உடனடியாக அவர் மருத்தவமனையில்சேர்க்கப்பட்டார்.
ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். குளிர்பானத்தில் விஷத்தைக்கலந்து டாக்டர் மலர்விழி குடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
அவர் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து தல்லாகுளம் போலீசார் விசாரித்துவருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications