பள்ளிகளில் தமிழ் கட்டாயமாகும்: ஜெ
சென்னை:
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் தமிழ் கட்டாய பாடமாக்கப்படும்என்று முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் நேற்று போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்நடைபெற்றது.
அப்போது பேசிய பாமக தலைவர் ஜி.கே. மணி, தமிழக எல்லைப் புறத்தில் உள்ள சில பகுதிகளில்தமிழ் கட்டாயப் பாடமாக இல்லை என்பதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்என்றார்.
அதற்குப் பதிலளித்த ஜெயலலிதா, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும்தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படும் என்று உறுதியளித்தார்.
தெலுங்கில் "மாட்லாடிய" ஜெயலலிதா:
இதற்கிடையே தமிழக சட்டசபையில் தெலுங்கில் பேசிய உறுப்பினரின் கேள்விக்கு ஜெயலலிதாதெலுங்கிலேயே பதில் அளித்தார்.
ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ. கோபிநாத் கன்னடத்தில் பேசத் தொடங்கினார். பிறகு தமிழுக்கு மாறியஅவர், தமிழில் தொடர்ந்து பேசத் தெரியாததால் தெலுங்கில் பேச ஆரம்பித்தார்.
தனது தொகுதியில் தெலுங்கு அகாடமி அமைக்க அரசு உதவ வேண்டும் என்று தெலுங்கில்கோரிக்கை விடுத்தார் அவர். அதற்கு ஜெயலலிதா தெலுங்கிலேயே பதிலளித்தார். இதுபோன்றமுக்கியமான விஷயங்கள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்துதான் முடிவெடுக்க முடியும்என்று அவர் கூறினார்.
ஓசூர் எம்.எல்.ஏ. 3 மொழிகளில் பேச, அவருக்கு ஜெயலலிதா தெலுங்கில் பதிலளித்தபோதுஅவையில் சிரிப்பலை எழுந்தது. பல அதிமுக உறுப்பினர்கள், தங்களது தலைவியின் தெலுங்குப்புலமையைப் பார்த்து ஆச்சரியத்தில் அமர்ந்திருந்தனர்.
ஜெயலலிதாவுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சரளமாக பேச,எழுத வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications