ஆற்றில் மணல் திருடினால் குண்டர் தடுப்புச் சட்டம் பாயும்
சென்னை:
ஆற்றுப் படுகைகளில் மணல் திருடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைஎடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று சட்டசபையில் தொழில்துறை அமைச்சர் நயினார் நாகேந்திரன் கூறுகையில்,
தமிழகத்தில் உள்ள ஆறுகளில் மணல் திருடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுள்ளது.இதுபோல் ஆற்றில் மணல் திருடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கைஎடுக்கப்படும்.
ஆற்றில் மணல் திருடியதாக சமீபத்தில் 50 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். மணல்திருடுவதற்காக அவர்கள் பயன்படுத்திய லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.14 லட்சம் வரைஅபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார் நயினார் நாகேந்திரன்.
கடந்த வாரம் காஞ்சிபுரம் அருகே பாலாற்றுப் படுகையில் மணல் திருட்டைத் தடுத்த அதிகாரியானசண்முகசுந்தரம் என்பவர் லாரியால் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டார் என்பதுநினைவிருக்கலாம்.
-->