சென்னை மாநகராட்சி கூட்டத்தில் கூச்சல், குழப்பம்: காங். கவுன்சிலர்கள் வெளிநடப்பு
சென்னை:
மாநகராட்சி வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தபோது தாங்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்துசென்னை மாநகராட்சிக் கூட்டத்திலிருந்து காங்கிரஸ் கவுன்சிலர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
சென்னை மாநகராட்சி அமைந்துள்ள ரிப்பன் கட்டடத்தில் தங்களுக்குத் தனி அறை ஒதுக்கப்படவேண்டும் என்று இதில் உறுப்பினர்களாக உள்ள 11 காங்கிரஸ் கவுன்சிலர்களும் கோரிக்கைவிடுத்தனர்.
சென்னை மாநகர துணை மேயர் கராத்தே தியாகராஜன் மற்றும் மாநகராட்சி கமிஷனர் கலைவாணன்ஆகியோரிடம் இது தொடர்பாக கோரிக்கை மனுவையும் அவர்கள் கொடுத்திருந்தனர்.
ஆனால் மாநகராட்சி நிர்வாகம் இதைக் கண்டு கொள்ளாததைத் தொடர்ந்து நேற்று ரிப்பன் கட்டடவளாகத்தில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் உண்ணாவிரதம் இருக்க முயற்சித்தனர். ஆனால் அவர்களைப்போலீசார் தடுத்து கைது செய்தனர்.
முன் கூட்டியே இந்தப் போராட்டம் குறித்து அறிவிக்கவில்லை என்று கூறி அவர்களைக் கைது செய்தபோலீசார் பின்னர் அவர்களை மாலையில் விடுவித்தனர்.
இந்நிலையில் இன்று காலை சென்னை மாநகராட்சியின் கூட்டம் தொடங்கியது. அப்போது,காங்கிரஸ் உறுப்பினர் ராயபுரம் மனோ பேசுகையில், காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு மாநகராட்சிவளாகத்தில் உரிய அறை ஒதுக்கித் தருமாறு பலமுறை கோரப்பட்டு அதற்கு எந்தவித பதிலும்கிடைக்கவில்லை.
இதைக் கண்டித்துதான் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. உண்ணாவிரதம்குறித்து கடந்த 26ம் தேதியே தெரிவிக்கப்பட்டு விட்டது. இருப்பினும் காங்கிரஸ் கவுன்சிலர்களைப்போலீசார் கைது செய்தது மரபு மீறிய செயலாகும்.
இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த ஆட்சியில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள்மதிக்கப்படுவதில்லை. அவர்களுடைய கோரிக்கைக்கும் மரியாதையே இல்லாமல் போய்விட்டதுஎன்று கூறினார் மனோ.
மனோ பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். பதிலுக்குஅவர்களை நோக்கி காங்கிரஸ் உறுப்பினர்களும் சத்தம் போட்டனர். இதையடுத்து அவையில்பெரும் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.
இந்நிலையில் "ஆளுங்கட்சி அராஜகம் ஒழிக" என்று கோஷம் போட்டவாறே காங்கிரஸ்கவுன்சிலர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதற்கிடையே சென்னை மாநகராட்சி திமுக தலைவரான மலையன் நிருபர்களிடம் பேசுகையில்,காங்கிரஸ் கவுன்சிலர்களின் நியாயமான இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டியதுமாநகராட்சியின் கடமை என்றார்.
-->












Click it and Unblock the Notifications