கோடை மழை: மகிழ்ச்சியில் மாவட்டங்கள்- வறட்சியில் சென்னை!
சென்னை:
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து 3 நாட்களாக கோடை மழை பெய்து மக்களைக்குளிர்வித்து வருகிறது.
தமிழகம் முழுவதிலும் வெயில் வறுத்தெடுத்து வந்தாலும், மறுபக்கம் கோடை மழையும் பெய்துமக்களை சந்தோஷப்படுத்தி வருகிறது.
மதுரை, சேலம், திருச்சி, தேனி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், காஞ்சிபுரம், சிவகங்கைஎன பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து 3 நாட்களாக கோடை மழை பெய்துவருகிறது.
தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், வைகை அணையின்நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து தற்போது 32 அடியை எட்டியுள்ளது. பெரியகுளத்தில் பெய்தமழையால் வராக நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மதுரையில் நேற்று மாலை ஒரு மணி நேரம் நல்ல மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளானபெரியார் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்துபாதிக்கப்பட்டது.
இதேபோல காஞ்சிபுரத்தில் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதில் பல்வேறு பகுதிகளில்மரங்கள் உடைந்து விழுந்ததில் மின் கம்பிகள் அறுந்தன. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி, சேலம், கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மற்ற மாவட்டங்களிலும் தொடர்ந்து நல்லமழை பெய்து வருகிறது.
சென்னையில் வெயிலோ வெயில்:
மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வரும் வேளையில், சென்னையில் மட்டும் வெயில்வறுத்தெடுத்து வருகிறது.
தினமும் இரவு 7 மணி வரை வெப்பத்தின் கொடுமையால் சென்னை மக்கள் கடும் அவதிஅடைந்துள்ளனர்.
இருப்பினும் கடந்த 2 நாட்களாக மாலையில் மேகங்கள் கருத்து மழை வருவது போலத் தோன்றியது.ஆனாலும் அண்டை மாவட்டங்களில் மட்டுமே மழை பெய்தது. சென்னையில் ஒரு சொட்டு மழைகூடப் பெய்யவில்லை.
-->