அமெரிக்காவில் டெண்டுல்கருக்கு ஆபரேஷன் நடந்தது
பால்டிமோர் (அமெரிக்கா):
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கருக்கு அமெரிக்காவில்உள்ள மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டியின்போது பந்தை கேட்ச்பிடித்தபோது டெண்டுல்கரின் இடது கை மோதிர விரலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இருந்தாலும் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்திய அணியை டெண்டுல்கர் இறுதிப் போட்டி வரைகொண்டு சென்றதோடு நில்லாமல், 673 ரன்களைக் குவித்து "தொடர் நாயகன்" விருதையும் தட்டிச்சென்றார்.
ஆனாலும் அவருடைய இடது கையில் தொடர்ந்து வலி இருந்து வந்தது. இதையடுத்துஅமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள டெண்டுல்கரின்மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
அதன்படி சமீபத்தில் அமெரிக்காவின் பால்டிமோருக்கு வந்து சேர்ந்தார் டெண்டுல்கர். இங்குள்ளசினாய் மருத்துவமனையில் நேற்று அவருடைய இடது கையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
டெண்டுல்கரின் இடது கை சுண்டு விரல் காயம் முழுவதுமாகச் சரியாக 3 மாதங்கள் ஆகும் என்றுஅறுவைச் சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.
-->












Click it and Unblock the Notifications