சார்ஸ் நோயாளிக்கு எதிராய் சாலை மறியல்
பெண்ணாத்தூர்:
வேலூர் அருகே உள்ள பெண்ணாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து சார்ஸ் நோயாளி ஏழுமலைக்குசிகிச்சை அளிக்க அந்த ஊரில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக இன்று அந்த கிராம மக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதையடுத்து 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஏழுமலையை 10 நாட்களுக்கு இந்தசுகாதார நிலையத்தில் தனிமைப்படுத்தி வைத்திருக்க மாவட்ட கலெக்டரும், மருத்துவ அதிகாரிகளும் முடிவுசெய்துள்ளனர்.
ஆனால், இதற்கு பெண்ணாத்தூரில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இன்று சுமார் 300 கிராம மக்கள் திடீரெனசாலை மறியலில் ஈடுபட்டனர். சுகாதார நிலையத்தில் ஏழுமலைக்கு சிகிச்சை தந்தால் இந்த ஊரைச் சேர்ந்தமற்றவர்களுக்கும் சார்ஸ் நோய் பரவும் என வதந்தி கிளம்பியதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை சமாதானப்படுத்த அதிகாரிகள் எவ்வளவோ முயன்றனர். ஆனால், அவர்கள் தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டதால் 50 பேரைக் கைது செய்து மற்றவர்களை போலீசார் விரட்டி அடித்தனர்.
இதனால் பெண்ணாத்தூரில் பெரும பரபரப்பு நிலவுகிறது.
-->












Click it and Unblock the Notifications