மயிலாடுதுறையில் காங். விவசாய செயலாளர் வெட்டிப் படுகொலை
மயிலாடுதுறை:
தமிழக காங்கிரஸின் விவசாயப் பிரிவு செயலாளரான குரு ஞானசேகரன் அரிவாளால் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டார்.
நேற்று இரவு குரு ஞானசேகரன் தன் காரில் ஏறிக் கொண்டிருந்தார். அப்போது காரின் பின்னே மறைந்திருந்த ஒருகும்பல் திடீரென்று அவர் மீது நாட்டு வெடிகுண்டுகளை எறிந்தது.
பின்னர் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் காரின் பின்னாலிருந்து வெளிப்பட்டு அவரை நோக்கிப் பாய்ந்தனர்.அவர்களுடைய கையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்கள் இருந்தன.
அவர்களைப் பார்த்ததும் குரு ஞானசேகரன் தப்பி ஓட முயற்சித்தார். ஆனால் உடனே சுற்றி வளைத்த அந்தக்கும்பல் அவரைச் சராமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துச் சாய்ந்தார்.
அவருடன் வந்த அவருடைய உதவியாளருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இருவரும் கீழே சரிந்ததும்அவர்களைத் தாக்கியவர்கள் இருளில் தப்பி ஓடி விட்டனர்.
சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது குரு ஞானசேகரனும் அவருடையஉதவியாளரும் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்தனர்.
இதையடுத்து இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் குரு ஞானசேகரன்வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய உதவியாளர் வெட்டுக் காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்தப் படுகொலைச் சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications