For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய அரசு ரூ.2,500 கோடி அளித்தால்தான் தமிழகத்தில் மதிப்பு கூட்டு வரி: ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மதிப்புக் கூட்டு வரி விதிப்பை அமல்படுத்தினால் ஏற்படும் ரூ.2,500 கோடி இழப்பை மத்திய அரசு சரிக்கட்டினால்மட்டுமே அதை தமிழகத்தில் அமல்படுத்த தயாராக இருப்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சட்டசபையில் வணிக வரித் துறைக்கான மானியக் கோரிக்கை தொடர்பான விவாதம் நேற்று நடந்தது. அப்போதுமதிப்புக் கூட்டு வரி விதிப்பு தொடர்பாக பா.ஜ.க. உறுப்பினர் லட்சுமணன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஜெயலலிதா பதிலளித்துப் பேசுகையில், மதிப்புக் கூட்டு வரி விதிப்பை அமல்படுத்தினால் தமிழகத்திற்குரூ.2,500 கோடி இழப்பு ஏற்படும்.

மதிப்புக் கூட்டு வரியை அமல்படுத்தும்போது மாநில அரசுக்கு ஏற்படும் இழப்பை நிரந்தரமாக ஈடுகட்டுவோம்என்று மத்திய அரசு உறுதியாகக் கூறவில்லை. முதல் ஆண்டில் மட்டுமே முழுமையான நஷ்ட ஈடு தரப்படும் என்றுகூறியுள்ளது மத்திய அரசு.

2ஆம் ஆண்டு அதைக் குறைத்து விட்டு, 3ம் ஆண்டு அதை இன்னும் குறைத்து பின்னர் நிறுத்தியே விடுவார்களாம்.இதை ஏற்றுக் கொள்ள முடியாது.

சிரமம் இல்லாமலும் பிரச்சனை ஏதும் இல்லாமலும் மதிப்புக் கூட்டு வரியை அமல்படுத்த முடியாது.

இதை அமல்படுத்துவதால் தமிழகத்துக்கு ஏற்படும் ரூ.2,500 கோடி இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு முன்வந்தால்மட்டுமே உடனடியாக அந்த வரி விதிப்பை அமல்படுத்த தமிழக அரசு தயாராக உள்ளது.

இல்லாவிட்டால் தமிழகத்தில் மதிப்புக் கூட்டு வரியை அமல்படுத்த முடியாது என்று கூறினார் ஜெயலலிதா.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X