அயோத்தி: நிலத்தை தோண்ட மேலும் 35 நாள் அவகாசம்
லக்னோ:
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் இருந்ததா என்பதைக் கண்டறிவதற்காகநடைபெறும் அகழ்வாராய்ச்சிப் பணிகளை முடிப்பதற்கு மேலும் 35 நாட்கள் கால அவகாசம்அளிக்கப்பட்டுள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சுதிர் நரெய்ன், நீதிபதி அலாம் மற்றும் நீதிபதி பன்வர் சிங்ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் இருந்ததாக என்பதைக் கண்டறிவதற்காகநிலத்தைத் தோண்டிப் பார்க்குமாறு மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 5ம் தேதிஉத்தரவிட்டது. ஒரு மாதத்திற்குள் இந்தப் பணியை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து மார்ச் 10ம் தேதி மத்திய தொல்பொருள் துறையினர் அயோத்தியில் தோண்டும்பணிகளைத் தொடங்கினர். பழங்கால அடுப்பு, சங்கு, மட்பாண்டங்கள், "அல்லா" என்று பெயர்பொறிக்கப்பட்ட கல் உள்பட பல பொருட்கள் தோண்டும்போது கிடைத்தன.
ஒரு மாத கால அவகாசம் முடிந்த நிலையில் மே 10ம் தேதி வரை அலகாபாத் உயர் நீதிமன்றம்நிலத்தைத் தோண்டி ஆராய்வதற்கான காலக் கெடுவை நீட்டித்தது.
இந்நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், அயோத்தி நிலத்தைத் தோண்டி ஆராயும்பணிகளை வரும் ஜூன் 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் ஜூன் 30ம் தேதிக்குள் தொல்பொருள் துறையினர் தங்களுடைய இறுதி அறிக்கையைத்தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதைத் தவிர, தோண்டப்பட்ட பகுதிகளில் மழை நீர் போன்றவை இறங்கி விடாதவாறுபிரம்மாண்டமான டெண்ட்டுகளைக் கொண்டு அனைத்துப் பகுதிகளையும் மூட வேண்டும் என்றும்நீதிபதிகள் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இதையடுத்து இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.