சென்னையில் வரதராஜ பெருமாள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இலங்கை வடகிழக்கு மாகாண முன்னாள் முதல்வரான வரதராஜ பெருமாள் சென்னையில்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும், முன்னாள் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவுக்கும்இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு அதன் தொடர்ச்சியாக புதிதாக உருவாக்கப்பட்ட வட கிழக்குமாகாணத்தின் முதல்வராக, ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்.) அமைப்பைச் சேர்ந்தவரதராஜ பெருமாள் நியமிக்கப்பட்டார்.

ஆனால் இலங்கையில் அமைதிப் பணிகளை மேற்கொண்டிருந்த இந்திய ராணுவம், அங்கிருந்துவாபஸ் பெறப்பட்டதும் மீண்டும் விடுதலைப் புலிகளின் கை ஓங்கியது.

இதைத் தொடர்ந்து வரதராஜ பெருமாள் குடும்பத்துடன் இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார்.முதலில் அவர் மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு இடத்தில் தங்க வைக்கப்பட்டார். பின்னர் ராஜஸ்தான்மாநிலம் ஆஜ்மீரில் வைக்கப்பட்டார்,

இதற்கிடையே 2001ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது வரதராஜ பெருமாள்மீண்டும் இலங்கை திரும்பினார். ஆனால் தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் ஆஜ்மீர் திரும்பினார்.

இந்நிலையில் கடந்த வாரம் அவர் வேறு ஒரு ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டு விட்டதாக உளவுப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் எந்த இடத்திற்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார்என்பது தெரிவிக்கவில்லை. டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிகிறது.

இந் நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் வரதராஜ பெருமாள் தன் மனைவி கெளரி, 3 மகள்கள்மற்றும் மைத்துனியுடன் சென்னைக்கு வந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

சென்னையிலேயே குடும்பத்துடன் தங்க அவர் அனுமதி கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.ஆனால் அவர் எங்கு தங்கியுள்ளார், அவருக்கு அனுமதி கொடுக்கப்பட்டு விட்டதா என்றுதெரியவில்லை.

இந்திய வெளியுறவுத்துறை, ரா, ஐ.பி. மற்றும் மாநில உளவுப் பிரிவு போலீசாரின் நேரடிப்பாதுகாப்பில் வரதராஜ பெருமாள் வைக்கப்பட்டுள்ளார். அவரது செலவுகளை இந்தியவெளியுறவுத்துறை தான் ஏற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+