தமிழை செம்மொழியாக அறிவிக்க கோரி பாண்டி சட்டசபையில் தீர்மானம்
பாண்டிச்சேரி:
தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கோரி பாண்டிச்சேரி சட்டசபையில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக பாண்டிச்சேரி சட்டசபையில் எதிர்க் கட்சித் தலைவர் ஜானகிராமன் ஒருதீர்மானத்தைக் கொண்டு வந்து பேசுகையில்,
தமிழ் மொழியை செம்மொழியாக மத்திய அரசு அங்கீகாரம் செய்ய வேண்டும் என்ற கருத்துக்குஉலகெங்கிலும் உள்ள தமிழர்களும், தமிழ் மொழியைக் கற்று உணர்ந்தவர்களும் வரவேற்புஅளித்துள்ளனர்.
பல கோடி மக்களால் பேசப்படும் நம் தமிழ் மொழி இலக்கிய வளம், இலக்கண வளம் மற்றும்தனித்து இயங்கும் தன்மை கொண்ட மொழியாகும்.
உயர் தத்துவங்களையும் மெய்யறிவையும் உலகிற்குத் தந்தது தமிழ் மொழியே.ஐம்பெருங்காப்பியங்கள், திருக்குறள், தொல்காப்பியம், நாலடியார் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானஇலக்கிய நூல்களைக் கொண்டுள்ளது தமிழ் மொழி.
பாரசீகம், பார்சி, சமஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளை மத்திய அரசு செம்மொழியாகஅறிவித்துள்ளது. ஆனால் பல கோடி மக்கள் பேசும் தமிழ் மொழி மட்டும் புறக்கணிக்கப்பட்டுவருகிறது.
தமிழ் மொழியின் சிறப்பையும் அதன் தொன்மையையும் பல்வேறு இலக்கிய நூல்கள் மூலம் ஆய்வுசெய்து வரும் திமுக தலைவர் கருணாநிதி, தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்றுமத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனவே தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று பாண்டிச்சேரி சட்டசபையிலும்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார் ஜானகிராமன்.
அவருடைய கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.க., திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தஎம்.எல்.ஏக்களும் பேசினார்கள். அதன் பின்னர் முதல்வர் ரங்கசாமி பேசுகையில்,
எதிர்க் கட்சித் தலைவர் கூறியது நல்ல கருத்து. மிகவும் இனிமையான மொழி தமிழ். அனைவரும்விரும்பிப் படிக்கக் கூடிய மொழியாக இருப்பதாலேயே அதைப் பள்ளிகளில் கட்டாயப்பாடமாக்கியுள்ளோம்.
எனவே தமிழை செம்மொழியாக்கக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றலாம் என்றார் ரங்கசாமி.
இதையடுத்து அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தமிழை செம்மொழியாக மத்திய அரசுஅறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் பாண்டிச்சேரி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
-->