For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கைக்குழந்தையுடன் நீதிமன்றத்தில் ஆஜரான தலால் ஆஸ்மி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கடந்த ஆண்டு போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவுக்கு வந்து பிடிபட்ட குவைத் பெண் தலால்ஆஸ்மி இன்று தன் கைக்குழந்தையுடன் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

ஆந்திராவைச் சேர்ந்த காதர் பாட்சா என்ற தன் காதலருடன் கடந்த ஆண்டு குவைத்திலிருந்துசென்னை வந்து சேர்ந்தார் தலால் ஆஸ்மி. ஆனால் போலி பாஸ்போர்ட் மூலம் அவர் வந்திருப்பதைசென்னை விமான நிலைய அதிகாரிகள் கண்டுபிடித்து விட்டனர்.

இதையடுத்து தலால் ஆஸ்மியைப் போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் தமிழக முதல்வர்ஜெயலலிதாவின் பரிந்துரையின் பேரில் தலால் ஆஸ்மி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து ஆந்திரா சென்ற தலால் ஆஸ்மி தன் காதலரான காதர் பாட்சாவைத் திருமணம்செய்து கொண்டார். காதர் பாட்சாவின் சொந்த ஊரில் அவருடனேயே வசித்து வரும் தலால்ஆஸ்மிக்கு ஒரு சில மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்தது.

இதற்கிடையே அவர் மீதான வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்தது.இந்நிலையில் இன்று காலை தலால் ஆஸ்மி சென்னைக்கு வந்து ஆலந்தூர் நீதிமன்றத்தில்ஆஜரானார்.

அவருடன் காதர் பாட்சாவும் அவர்களுடைய கைக்குழந்தையும் கூட நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன் அடுத்த கட்ட விசாரணையை வரும் ஆகஸ்டு 1ம்தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையடுத்து தன் கணவர் மற்றும் குழந்தையுடன் ஆந்திராவுக்குக் கிளம்பினார் தலால் ஆஸ்மி.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X