சென்னையில் சார்ஸ் இல்லை: அரசு மருத்துவமனை மறுப்பு
சென்னை:
சென்னை அரசு பொது மருத்துவமனையில் 3 பேர் சார்ஸ் நோய் அறிகுறிகளுடன்சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் பொய் என்று அம்மருத்துவமனையின் டீன் டாக்டர்விஜயலட்சுமி மறுத்துள்ளார்.
நேற்று 3 பேர் கடும் காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறலுடன் இம்மருத்துவமனையில்சேர்க்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து அவர்களுக்கு சார்ஸ் நோய் இருக்கலாம்எனக் கருதி அவர்களுடைய ரத்தம், சிறுநீர், சளி போன்றவை சோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும்கூறப்பட்டது.
ஆனால் இந்தத் தகவல்களை டாக்டர் விஜயலட்சுமி மறுத்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர்நிருபர்களிடம் கூறுகையில்,
அரசு பொது மருத்துவமனையில் சார்ஸ் நோய் அறிகுறிகளுடன் 3 பேர் சேர்க்கப்பட்டதாகவெளியான செய்திகள் பொய். அப்படி யாரும் இங்கு சேர்க்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள்பீதி அடையத் தேவையில்லை.
இருந்தாலும் சார்ஸ் அறிகுறிகளுடன் நோயாளிகள் யாரும் வந்தால் அவர்களுக்காக 5 படுக்கைகள்கொண்ட தனி வார்டு தயாராக உள்ளது. அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கவும் தனி மருத்துவர்கள்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.
சார்ஸ் நோயாளிகள் வந்தால் எந்த நிமிடமும் சிகிச்சை அளிப்பதற்குத் தயார் நிலையில் உள்ளோம்என்றார் டாக்டர் விஜயலட்சுமி.
பீதியின்றி உலவும் "ஏழுமலை" கிராமத்தினர்:
இதற்கிடையே சார்ஸ் நோய் உறுதியாகியுள்ள சிங்கப்பூர் டிரைவர் ஏழுமலையின் சொந்த ஊரைச்சேர்ந்த மக்கள் எந்தவிதமான பயமும் இல்லாமல் உள்ளனர்.
சிங்கப்பூரில் டிரைவராக வேலைபார்த்து வந்த திருவண்ணாமலை மாவட்டம் சின்ன புஷ்பகிரிகிராமத்தைச் சேர்ந்த ஏழுமலைக்கு சார்ஸ் வைரஸ் இருந்ததாக ஆய்வில் தெரிய வந்தது.
தற்போது அவர் குணமாகி விட்டதாகக் கூறப்பட்டாலும், இன்னும் சில நாட்களுக்கு அவர்தனிமையில் வைத்திருக்கப்படுவார் என்று வேலூர் சி.எம்.சி. மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில்சின்ன புஷ்பகிரி கிராமத்தில் சார்ஸ் பரவி இருக்குமோ என்ற பயம் முதலில் இருந்தது.ஆனால் இப்போது சுத்தமாகப் பயம் போய் விட்டது.
இதற்கு கிராமத்து மக்கள் காரணம் கூறும்போது, இயற்கையாகவே இந்த ஊரில் நோய்கள்அவ்வளவு சீக்கிரம் அண்டாது.
மிகப் பெரிய மலைகள் சுற்றிலும் சூழ்ந்து நிற்க, அந்த மலைகளில் உள்ள மூலிகைச் செடிகள், எந்தநோயையும் தடுக்கும் சக்தி கொண்டவை. எனவே சார்ஸைத்
தடுக்கும் சக்தி இந்த மூலிகைச் செடிகளுக்கு உண்டு.
ஏழுமலை இங்கு வந்தாலும்கூட அவர் மூலம் நிச்சயம் சார்ஸ் பரவாது என்று அபரிமிதமானநம்பிக்கையுடன் அம்மக்கள் கூறியுள்ளனர்.
-->