தடுமாறும் சீனா: இந்தியாவுக்கு அடித்த லாட்டரி
டெல்லி:
சீனாவில் சார்ஸ் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அந் நாட்டுக்கான ஜவுளி ஆர்டர்களை பலநாடுகள் திரும்பப் பெற்று வருகின்றன. அந்த ஆர்டர்களை இந்தியாவுக்கு திருப்பி விட்டுள்ளன.
இதனால் திருப்பூர் உள்பட இந்தியாவின் ஜவுளி நகர்கள் பெரும் லாபம் அடையும் என்று தெரிகிறது.
சார்ஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள சீனாவிடம் இருந்து ஜவுளிகளை இறக்குமதி செய்ய ஐரோப்பிய நாடுகள்அஞ்சி வருகின்றன. இதனால் சீனாவுக்குத் தரப்பட்ட பல மில்லியன் மதிப்புள்ள ஆர்டர்களை ரத்து செய்துள்ளன.
அவற்றை இந்தியாவுக்குத் திருப்பி விட்டுள்ளன. இதையடுத்து ஐரோப்பாவுக்கு இந்திய ஜவுளி ஏற்றுமதி பலமடங்கு அதிகரிக்க உள்ளது. இதை எப்படியாவது எதிர்காலத்திலும் தக்க வைத்துக் கொள்ள இந்தியாதிட்டமிட்டுள்ளது.
ஜவுளி ஏற்றுமதி குறித்து விவாதிக்க மத்திய ஜவுளித்துறை செயலாளர் மகாபாத்ரா ஐரோப்பிய நாடுகளுக்கு அவசரபயணம் மேற்கொண்டுள்ளார். ஐரோப்பிய யூனியன் அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தைகளில்ஈடுபட்டுள்ளார்.
பீதியில் சீனா:
இதற்கிடையே சார்ஸ் நோய் தனது உச்சத்தை அடைந்து வருவதாக சீன நலத்துறை அறிவித்துள்ளது. இதனால் மிகஎச்சரிக்கையுடன் இருக்குமாறு நாட்டு மக்களுக்கு சீன அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார். சார்ஸ்சுக்கு எதிராகமக்கள் போராட்டம் நடத்த சீனா தயாராகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
-->