வேலூர் சார்ஸ் நோயாளி டிஸ்சார்ஜ்

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

Elumalaiசார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தஏழுமலை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவரது வீட்டுக்குத் திரும்பினார்.

சிங்கப்பூரில் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் ஏழுமலை. விடுமுறைக்காக அவர் தன் சொந்தஊருக்கு வந்தபோது, அவருக்கு சார்ஸ் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவர் சி.எம்.சி.மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சார்ஸ் நோய் இருப்பதை புனேயில் உள்ள தேசியவைரஸ் ஆய்வுக் கழகம் உறுதி செய்தது.

இருப்பினும் தீவிர சிகிச்சைக்குப் பின் அவர் குணமாகி விட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர்.இதையடுத்து கடந்த 2 நாட்களாக மருத்துவமனையிலேயே தொடர்ந்து வைக்கப்பட்டு முழுமையாககண்காணிக்கப்பட்டார் ஏழுமலை.

இந்நிலையில் தற்போது முற்றிலும் குணமடைந்து விட்டதாலும், அவர் மூலம் சார்ஸ் பிறருக்கு பரவும்வாய்ப்பே இல்லை என்பதாலும் ஏழுமலையை டிஸ்சார்ஜ் செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சொந்த ஊரான திருவண்ணாமலைமாவட்டத்தில் உள்ள சின்ன புஷ்பகிரிக்கு அனுப்பப்பட்டார்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மேலும் சில நாட்களுக்கு ஏழுமலை முழுமையாககண்காணிக்கப்படுவார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+