கடலூர் சிறையில் கைதி தூக்குப் போட்டுத் தற்கொலை
கடலூர்:
கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனைக் கைதி தூக்குப் போட்டுத்தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் மத்திய சிறையில் ஆறுமுகம் என்பவர் ஆயுள் தண்டனைக் கைதியாகஅடைக்கப்பட்டிருந்தார். இவரும், இவரது மனைவி சந்திராவும் கடந்த 1993ம் ஆண்டு நடந்தகொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனர். வேலூர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளார் சந்திரா.
தங்களது தண்டனையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இருவரும் அப்பீல்செய்திருந்தனர். ஆனால் தண்டனையை ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்றம், இருவருக்கும் ஆயுள்தண்டனையைக் குறைத்து 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக மாற்றியது.
இதனால் மனம் உடைந்த ஆறுமுகம் நேற்று அதிகாலை தனது சிறை அறையின் உத்தரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக சிறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->