சென்னை to
பர்கூர்:
காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக தன்னுடைய இறந்த குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டுசென்னையிலிருந்து பஸ்சில் பர்கூர் வந்து சேர்ந்தார் ஒரு பெண்.
பர்கூர் அருகே உள்ள கூச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சிதா. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்தமாதேஷ் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. அது சல்லாபத்தில் முடிய, அதன்விளைவாக ரஞ்சிதா கர்ப்பமடைந்தார். ஆனால் அவரைக் கல்யாணம்செய்து கொள்ளமுடியாதுஎன்று மாதேஷ் மறுத்து விட்டார்.
இந்நிலையில் ஊரில் இருந்தால் அவமானம் என்று நினைத்த ரஞ்சிதாவின் பெற்றோர், அவரைசென்னையில் உள்ள அவருடைய பெரியப்பா வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 நாட்களுக்குமுன் ரஞ்சிதாவுக்குக் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் பிறந்தவுடனேயே அது இறந்து விட்டது.
காதலனும் கிடைக்கவில்லை, பிறந்த குழந்தையும் இறந்து விட்டதால் விரக்தியடைந்தார் ரஞ்சிதா.இருந்தாலும் மனதை திடப்படுத்திக் கொண்டு இறந்த குழந்தையை எடுத்துக் கொண்டு பஸ் ஏறிபர்கூர் வந்தார்.
அங்குள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற ரஞ்சிதா தன் காதலன் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறும் கூறி புகார் கொடுத்தார்.
ரஞ்சிதாவின் சோகத்தைக் கேட்ட மகளிர் காவலர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இறந்த குழந்தைபிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.தலைமறைவாகியுள்ள மாதேஷை போலீசார் தேடி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications