மதச்சார்பின்மை = காரைக்கால் எம்.எல்.ஏ.
காரைக்கால்:
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்கால் பகுதி எம்.எல்.ஏவான நஸீம் மதச்சார்பின்மைக்கு சரியான அடையாளமாக திகழ்கிறார்.
பாண்டிச்சேரி அரசில் அமைச்சராக பதவி வகித்த நஸீம், காரைக்கால் தொகுதியின் தற்போதையஎம்.எல்.ஏவாக உள்ளார். பிறப்பாஸ் முஸ்லீமாக இருந்தாலும் காரைக்கால் அம்மையாரின் தீவிரபக்தர் ஆவார்.
தனது தொகுதியில் நடைபெறும் இந்து மற்றும் கிறிஸ்தவ விழாக்களில் முதல் ஆளாக நிற்பார் நஸீம்.
இதேபோல காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் உலக அமைதியை வலியுறுத்தி சமீபத்தில் யாகம்நடத்தப்பட்டது. கணபதி ஹோமம், மீனாட்சி யாகம் ஆகியவை நடந்தன. இவற்றில் நஸீம் கலந்துகொண்டு மிகவும் பயபக்தியுடன் யாகங்களில் பங்கேற்றார்.
காரைக்கால் தொகுதியில் இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் சம அளவில் உள்ளனர்.அதனால்தானோ என்னவோ இந்தத் தொகுதியில் உள்ள அனைத்து மதத்தினரும் எப்போதுமேஒற்றுமையாக காணப்படுவர்.
அதற்கேற்ப அவர்களது எம்.எல்.ஏவும் அமைந்திருப்பதில் தொகுதி மக்கள் மிகவும்பெருமைப்படுகின்றனர்.
-->