தமிழக பெண் பெங்களூர் மருத்துவமனையில் சாவு
பெங்களூர்:
தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் உடல் நலம் சரியில்லாமல் பெங்களூர் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விழுப்புரம் மாவட்டம் வேளாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த புஷ்பா என்ற பெண் தன்னுடைய 6 வயதுமகள் மற்றும் 4 வயது மகனுடன் பெங்களூர் வந்துள்ளார்.
அப்போது அவருக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து
பெங்களூரில் உள்ள நிமான்ஸ் மருத்துவமனையில் புஷ்பாவையும் அவருடைய குழந்தைகளையும்ஒரு பெண் கொண்டு வந்து சேர்த்து விட்டுச் சென்று விட்டார்.
இந்நிலையில் புஷ்பா சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். தாயை இழந்த அவருடைய 2குழந்தைகளும் மருத்துவமனையிலேயே பரிதாபமாக விழித்துக் கொண்டிருக்கின்றன.
மருத்துவமனை பதிவேட்டில் உள்ள தகவலின் அடிப்படையில்தான் இறந்த பெண்ணின் பெயர்புஷ்பா என்றும் அவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக பெங்களூர் வில்ஸன் கார்டன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.