சீனாவில் இந்திய சார்ஸ் நோயாளி
பெய்ஜிங்:
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளவர்களில்ஒருவர் இந்தியர் என்று தெரியவந்துள்ளது.
இப்போது பெய்ஜிங்கில் சார்ஸினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்கள் 3 பேர் உள்ளனர். இதில் ஒருவர் இந்தியர்இன்னும் இருவர் அமெரிக்கர்கள் என பெய்ஜிங் நகராட்சியின் நலக் கமிட்டி இயக்குனர் காய் புசோ தெரிவித்தார்.
இதில் அமெரிக்கர்கள் இருவருக்கும் நோய் குணமாகிவிட்டது. இதனால் அவர்கள் மருத்துவமனையில் இருந்துசில நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர். ஆனால், இந்தியருக்கு நோய் தீவிரமாக உள்ளது. அவருக்குத்தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவர்கள் தவிர கனடா, ஆஸ்திரேலியா, கிர்கிஸ்தான், தைவான், ஹாங்காங் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் 6பேருக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டு சரியாகிவிட்டதாகவும் அவர் கூறினார்.
சீனத் தநைகர் பெய்ஜிங்கில் மட்டும் இதுவரை 1,897 பேர் சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புசோதெரிவித்தார்.












Click it and Unblock the Notifications