மாணவர் போராட்டத்தை அடக்கும் அரசு: மருத்துவக் கல்லூரி விடுதிகள் மூடல், மெஸ்களும் அடைப்பு
சென்னை:
மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளதையடுத்து அதை அடக்கும் முயற்சிகளில்தமிழக அரசு இறங்கியுள்ளது.
முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் விடுதிகளையும் மெஸ்களையும் மூடஉத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து விடுதிகள் மூடப்பட்டுவிட்டன.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் துவங்குவதை எதிர்த்தும், தங்களது பல பாடத் திட்டங்களுக்கு அரசு இன்னும்அங்கீரம் தராமல் இருப்பதைக் கண்டித்தும் மருத்துவக் கல்லூரி மாணவர்களும் ஹவுஸ் சர்ஜன்கள் எனப்படும் 5ம்ஆண்டு மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அரசு மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு சிகிச்சை தர போதிய டாக்டர்கள் இல்லாமல் தடுமாறிவருகின்றன.
இதைச் சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு வெறும் வெட்டிப் பேச்சு தான் பேசிவருகிறதே தவிர, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் அரசு மருத்துவமனைகளில் காலை நேரங்களில் ஒரு டாக்டருக்கு சராசரியாக 400 நோயாளிகள்வரிசையில் நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் மாணவர்களுடன் நலத்துறை அமைச்சர் செம்மலைநடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியைடந்தது.
இந் நிலையில் மாணவர்களின் போராட்டத்தை அடக்குவதாக நினைத்துக் கொண்டு கல்லூரி விடுதிகளையும்மெஸ்களையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதே ஸ்டைலைத் தான் ராணி மேரிக் கல்லூரிவிவகாரத்திலும் தமிழக அரசு கடைபிடித்து நீதிமன்றத்திடம் சூடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.மாநிலம் முழுவதும் உள்ள 12 மருத்துவக் கல்லூரிகளின் விடுதிகளும் மூடப்பட்டுவிட்டன. மெஸ்களும்மூடப்பட்டுவிட்டன.
இருந்தாலும் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டுள்ளது. நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில்தங்கிய வண்ணம் தங்கள் போராட்டத்தை மாணவர்கள் தொடர்ந்து கொண்டுள்ளனர்.