For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக சட்டசபையை கலக்கிய கன்னடம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஜெயலலிதாவுக்கும் பா.ம.கவினருக்கும் இடையே கன்னடத்தில்வாக்குவாதம் நடந்தது.

இன்று சட்டசபையில் பேசிய பா.ம.க. உறுப்பினர் கிருஷ்ணன் அருந்ததியர் சமுதாயத்துக்காக சில கோரிக்கைகளைவைத்தார். அப்போது திடீரென கன்னத்தில் பேசினார்.

உடனே அவரை நிறுத்திய சபாநாயகர் காளிமுத்து, நீங்கள் ஏதோ ஒரு பாஷையில் பேசுகிறீர்கள். அது உங்களகட்சித் தலைவர் ஜி.கே. மணிக்காவது புரியுமா என்று கேட்டார்.

உடனே எழுந்த ஜி.கே. மணியும் கன்னடத்திலேயே பேசினார். தான் பேசியது என்ன என்பதை தமிழிலும்விளக்கினார்.

இதைத் தொடர்ந்து எழுந்த முதல்வர் ஜெயலலிதாவும் கன்னடத்திலேயே கிருஷ்ணனுக்கு பதில் தந்தார். அப்போதுஜெயலலிதா கூறியதாவது: அருந்ததியர் இனத்தினருக்கு நல்வாழ்வு தர சில கோரிக்கைகளை முன் வைத்துகிருஷ்ணன் பேசினார். ஆனால், அவரது கன்னடம் புரியவில்லை. இப்போது ஜி.கே. மணி பேசிய கன்னடம்எனக்குப் புரிந்தது.

ஆனால், அதிகாரிகளுக்கும் புரிய வேண்டும். இதனால் நீங்கள் தமிழிலேயே பேசுவது தான் நல்லது என்றார்.

அப்போது இடைமறித்த காளிமுத்து, இப்போது தான் உண்மையான திராவிட நாடு சட்டசபை உருவாகியிருக்கிறதுஎன்றார். இதனால் அவையில் சிரிப்பொலி பரவியது.

இதையெல்லாம் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. ஹேமச்சந்திரன்எழந்து, இங்கே திடீரென ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு மொழிளில் பேசுகிறார்கள். எனவே எங்களுக்கு மொழிமாற்றுக் கருவிகள் வழங்கப்படுமா? என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த காளிமுத்து, இது சட்டசபை தான். இதை டெல்லி நாடாளுமன்றமாக மாற்ற நினைக்கிறீர்களாஎன்று கேட்டு அவரை உட்கார வைத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X