For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை- புலிகள் பேச்சு நெடுங்காலம் நீடிக்கலாம்: நார்வே

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கை அரசு- விடுதலைப் புலிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் நீண்டகாலம் தொடரலாம் என நார்வேகூறியுள்ளது.

இது குறித்து நார்வே அமைதித் தூதர் எரிக் சோல்ஹைம் கூறுகையில்,

பேச்சுவார்த்தைகள் நல்லபடியாய் நடக்க மிகுந்த பொறுமை வேண்டும். இந்த விஷயத்தில் இந்தியா சொன்னதுமிகச் சரியாகப் போய்விட்டது.

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கிடம் நான் பேசிக் கொண்டிருந்தபோது, பொறுமை மட்டும்இல்லாவிட்டால் எந்தப் பேச்சுவார்த்தையும் வெற்றி பெறாது. பொறுமையில்லாவிட்டால் நீங்கள் நார்வேக்குபிளேன் ஏற வேண்டியது தான் என்றார். அது எவ்வளவு சரியானது என்று இப்போது புரிகிறது.

இப்போது புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கும் என்றநம்பிக்கை எனக்கு உண்டு. பேச்சுவார்த்தைகள் பல ஆண்டுகள் கூட நீடிக்கலாம். இறுதியில் நல்ல பலன் கிடைக்கவேண்டும் என்பது ஆசை.

நார்வே துணை வெளியுறவுத்துறை அமைச்சர் விடார் ஹெல்கெசென், ஜப்பானிய சிறப்பு அமைதித் தூதர் யுசுசிஅகாஸி, இலங்கை பேச்சுவார்த்தைக் குழு உறுப்பினர்களான மிலிந்த மொரகொடா மற்றும் பெர்னார்ட் குணதிலகேஆகியோர் கடந்த வாரம் டெல்லி சென்று அந் நாட்டுத் தலைவர்களுடன் அமைதிப் பேச்சு குறித்துவிவாதித்துவிட்டுத் திரும்பினர்.

இந்த மூன்று நாட்டுக் குழுவினரும் தனித்தனியே தான் டெல்லி சென்றனர். ஆனால், எதிர்பாராத விதமான ஒரேநேரத்தில் இந்தியாவில் சந்தித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.

இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவு மிகப் பெரியது. எங்களுக்குஇந்தியா முழு துணை நிற்கிறது என்றார்.

நார்வே, ஜப்பான், இலங்கை குழுவினர் திட்டமிட்டே ஒரே நேரத்தில் டெல்லி வந்து இந்திய வெளியுறவுத்துறைஅதிகாரிகளுடன் பேச்சு நடத்திவிட்டுத் திரும்பியுள்ளனர். இந்தச் சந்திப்புகளை இந்த 3 நாடுகளும் இந்தியாவும்மறைத்துவிட்டன.

இப்போது தான் சந்திப்பு நடந்த விவரமே வெளியில் வந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X