நெடுமாறனின் சொத்துக்கள் குறித்து போலீசார் விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறனின் சொத்துக்கள்குறித்து விவரம் சேகரிக்கும் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ராஜ்குமாரை மீட்க வீரப்பனுக்கு பணம் கைமாறியதாகக் கூறப்படும் விவகாரத்தில் ஏற்கனவே நக்கீரன் ஆசிரியர்கோபாலிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் நெடுமாறனையும் கொளத்தூர் மணியையும் சேர்க்கமுயற்சி நடந்து வருகிறது.

ராஜ்குமாரை மீட்கச் சென்ற நெடுமாறன் மூலமும் வீரப்பனுக்கு பணம் கொடுக்கப்பட்டதாகவும் வழக்குப் போடும்வேலை தொடங்கியுள்ளது. வீரப்பனுக்கு தருவதற்காக வழங்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை நெடுமாறனும்,கொளத்தூர் மணியும் பங்கிட்டுக் கொண்டார்கள் என்ற ரீதியில் வழக்குப் பதிவு செய்ய முடியுமா என்று போலீசார்முயற்சித்து வருகின்றனர்.

வீரப்பன் விவகாரத்துக்குப் பின் இந்த இருவரும் புதிதாக சொத்து ஏதும் வாங்கினார்களா என்று விசாரித்துவருவதாகக் கூறும் போலீசார் இது தொடர்பாக பத்திரப் பதிவு அலுவலங்களில் இருந்து தங்கள் விசாரணையைஆரம்பித்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் உள்ள பத்திரப் பதிவு அலுவலங்களில் இந்த விசாரணையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார்இறங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+