கற்பழிப்பால் பூமி வந்த சிசு
சேலம்:
கற்பழிப்பில் பிறந்த பெண் சிசு அரசுத் தொட்டில் குழந்தைத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் பெரியேரிப்பட்டியைச் சேர்ந்தவர் பொற்கொடி. 16 வயதே ஆன இந்தக் கூலிப் பெண்ணை அதே ஊரைச் சேர்ந்த மேல்ஜாதி ரெளடிகளான மணிகண்டன், லட்சுமணன் ஆகியோர் அடிக்கடி மிரட்டிக் கற்பழித்துள்ளனர்.
இந்த விவரம் தெரிந்தும் கூட கிராமப் பெரிசுகள் அதை கண்டுகொள்ளவில்லை. மேல் ஜாதியினரின் வயல்களில் வேலை பார்த்துவயிற்றைக் கழுவி வரும் கூலித் தொழிலாளிகளான பொற்கொடியின் பெற்றோராலும் இதை எதிர்த்துப் போராட முடியவில்லை. இந்தஜாதியினரை எதிர்த்தால் ஊரை விட்டே விரட்டப்படும் நிலையில் அவர்கள் இருந்தனர்.
இதனால் இந்தக் கொடூரமான கற்பழிப்புகள் தொடர, பொற்கொடி கர்ப்பமடைந்தார். கருவைக் கலைக்கச் சொல்லி அவரைக்கற்பழித்தவர்கள் மிரட்டினர். ஆனால், கலைக்க பொற்கொடி மறுத்துவிட்டார். ஊரைவிட்டு வேறிடத்தில் பதுங்கியிருந்து தனது கருவைக்காத்தார்.
சில நாட்களுக்கு முன் பொற்கொடிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
பொற்கொடிக்கு 16 வயதே ஆவதால், அவரால் குழந்தையைப் பார்த்துக் கொள்ள முடியாது என்று கருதிய அவரது குழந்தையை அரசுத்தொட்டிலில் சேர்க்கமுடிவு செய்தனர்.
ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து குழந்தையை அவரிடம் ஒப்படைத்தார் பொற்கொடி.
மேலும், மைனர் பெண்ணான பொற்கொடி கற்பழிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த ராதாகிருஷ்னன் உடனே காவல்துறைஅதிகாரிகளை அழைத்து பொற்கொடியை இந்த அவல நிலைக்கு உள்ளாக்கிய இருவரையும் உடனடியாக கைது செய்யவும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications