ஜி.எஸ்.எல்.வி: கவுண்ட்டெளன் தொடங்கியது
சென்னை:
இந்தியா விண்ணில் செலுத்த உள்ள ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் கவுண்ட்டெளன் இன்று அதிகாலை 1.58 மணிக்குத் தொடங்கியது. இந்தராக்கெட் நாளை மாலை 4.58க்கு விண்ணில் பாய உள்ளது.
இந்த ஜி.எஸ்.எல்.வி.-டி2 ராக்கெட் 1,800 கிலோ எடை கொண்ட ஜிசாட்-2 என்ற செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த உள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தாவன் விண்வெளி மையத்தில் இருந்து இந்த ராக்கெட் செலுத்தப்பட உள்ளது.
செலுத்தப்பட்ட 999வது நொடியில் ஜிசாட் செயற்கைக் கோளை இந்த ராக்கெட் புவி வட்டப் பாதையில் செலுத்தும்.
2001ம் ஆண்டில் இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இப்போது இரண்டாவது முறையாக இந்தச் சோதனை நடக்கிறது.
இந்த ராக்கெட் ஏவப்படும் நிகழ்ச்சி பிரதமர் வாஜ்பாய்க்கு பிரத்யோகமாய் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
இதற்கிடையே இந்தியாவுடன் சேர்ந்து செயற்கைக் கோள்களைத் தயாரித்து விண்ணில் செலுத்த இஸ்ரேல் முன் வந்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரேலிய அதிகாரிகள் பெங்களூர் வந்து இஸ்ரோ அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.