ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்: 17ம் தேதிக்குள் வெளியீடு
சென்னை:
ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வரும் 17ம் தேதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் செம்மலை கூறியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ப்ளஸ் டூ தேர்வில் சுமார் 5 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
இதையடுத்து விடைத்தாள்களைத் திருத்தும் பணிகளும் வேகமாக நடந்து முடிந்துள்ளன. தற்போது மாணவ,மாணவிகளின் மதிப்பெண் பட்டியல்களைத் தயாரிக்கும் பணிகள் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அரசு தகவல்மையத்தில் நடந்து வருகின்றன.
இந்நிலையில் வரும் 16ம் தேதியிலிருந்து 19ம் தேதிக்குள் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனாலும் 17ம் தேதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட அனைத்து நடவடிக்கைகளும்மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செம்மலை அறிவித்துள்ளார்.
மேலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளும் வரும் 20ம் தேதிக்கு மேல் வெளியிடப்படும் என்று தெரிகிறது.