ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதிய சித்த வைத்தியர் கைது
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
தலைமைச் செயலகம் முன் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதிய சித்த வைத்தியர் கைதுசெய்யப்பட்டார்.
வேலூரைச் சேர்ந்த பாரம்பரிய சித்த வைத்தியர் ஜெயக்குமார். இவருக்கு 47 வயதாகிறது. தான் வேலையின்றி தவித்து வருவதாகவும்,வேலை வழங்கக் கோரி தலைமைச் செயலகம் முன்பாக உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் கடிதம்எழுதியிருந்தார்.
இந்தக் கடிதம் குறித்து தலைமைச் செயலக அதிகாரிகள் வேலூர் போலீஸாருக்குத் தகவல் தந்தனர். இதையடுத்து வேலூர் தெற்கு காவல்நிலையப் போலீஸார் ஜெயக்குமாரை கைது செய்தனர்.
பின்னர் இதுபோன்ற செயல்களில் இனிமேல் ஈடுபட மாட்டேன் என்று ஜெயக்குமார் எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி கொடுத்தார்.இதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications