For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திரிபுராவில் தீவிரவாதிகள் கொலை வெறி: 20 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

அகர்தலா:

திரிபுராவில் கிராம மக்கள் 20 தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களான திரிபுரா புலிகள் படையும், திரிபுரா தேசிய விடுதலைப் படையும் இந்தத் தாக்குதல்களைநடத்தியுள்ளன.

நேற்றிரவு இச் சம்பவங்கள் நடந்தன. மேற்கு திரிபுராவில் உள்ள சித்தி என்ற கிராமத்தில் தூங்கிக் கொண்டிருந்த கிராம மக்களை நோக்கிதிரிபுரா புலிகள் படையினர் துப்பாக்கிகளால் சுட்டனர். இதில் 18 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். இவர்கள் பழங்குடி இனத்தைசாராதவர்கள்.

மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.

அதே போல வடக்கு திரிபுராவில் குமார்காட் கிராமத்தில் திரிபுரா தேசிய விடுதலைப் படையினர் தாக்குதல் நடத்தி இரண்டு பேரைக்கொன்றனர். கொல்லப்பட்ட இருவரும் பழங்குடியினத்தைச் சாராதவர்கள் ஆவர்.

திரிபுராவில் தீவிரவாத இயக்கங்கள் அனைத்துமே பழங்குடி இனத்தினருக்கு ஆதரவானவையாக செயல்பட்டு வருகின்றன. அந்த மாநிலபூர்வீக இன மக்கள் தவிர மற்றவர்களை அங்கு வசிக்க இந்த தீவிரவாத இயக்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

வங்கதேசத்தில் தான் இந்தத் தீவிரவாதிகளின் முகாம்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது.

ஆனால், இது பழங்குடி, பழங்குடியல்லாதோர் இடையே நடக்கும் மோதல் அல்ல. தீவிரவாதிகள் யாரையெல்லாம் கொல்ல முடியுமோஅவர்களை எல்லாம் கொன்று குவித்து வருகின்றனர் என அம் மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X