குடிநீர் குழாய்க்காக அரிவாள் சண்டை: போலீஸ் துப்பாக்கிச் சூடு
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே ஏற்பட்ட திடீர் கலவரததை அடக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அயத்தூர் என்ற கிராமத்தில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. இந்தக் குடிநீர் குழாயை எங்கள் பகுதியில் தான் போட வேண்டும் என்றுகோரி இரு வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் திடீரென ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
முதலில் வாக்குவாதத்தில் ஆரம்பித்த இந்தப் பிரச்சனை பின்னர் அடிதடியாக மாறியது. தொடர்ந்து வீடுகளில் இருந்து அரிவாள், கத்திகளைஎடுத்து வந்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் தடியடி நடத்தி அவர்களைக் கலைக்க முயன்றனர். ஆனால், இதனால் பலன் ஏற்படவில்லை.இதைத் தொடர்ந்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதன் பின்னர் தான் இரு தரப்பினரும் சிதறி ஓடினர். இப்போது அங்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளதால் அமைதி நிலவுகிறது.












Click it and Unblock the Notifications