நீதிபதியின் மனிதாபிமானம்: புத்துயிர் பெற்ற மனநிலை பாதிக்கப்பட்ட மூதாட்டி
சென்னை:
சாலையோரத்தில் மயங்கிக் கிடந்த மனநிலை பாதிக்கப்பட்ட மூதாட்டியை தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைத்துஅவரைக் காப்பாற்றியுள்ளார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா.
நீதிபதி கலிபுல்லா வழக்கம் போல, ஆலப்பாக்கம் சாலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது பிளாட்பாரத்தில் ஒருமூதாட்டி மண்ணில் கிடந்தார். மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார் அந்தப் பாட்டி.
இதைப் பார்த்த நீதிபதி அங்கிருந்தவாறே தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணையரைத் தொடர்பு கொண்டு பேசினார்.
ஆணையர் உடனடியாக முகப்பேர் பகுதியிலிருந்து இயங்கி வரும் பான்யன் என்ற ஆதரவற்றோர் காப்பகத்தைத் தொடர்புகொண்டு விஷயத்தைத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பான்யன் அமைப்பினர் விரைந்து சென்று அந்த மூதாட்டியை மீட்டுதங்களது காப்பகத்திற்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கவும் நீதிபதி ஏற்பாடு செய்தார். அவரை தொடர்ந்து பான்யன் இல்லத்திலேயேவைத்திருக்கும்படியும் நீதிபதி கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications