குர்ரானை தமிழில் படிக்க கோரிய முஸ்லீம் குடும்பங்கள் சமூக புறக்கணிப்பு
திருநெல்வேலி:
திருக்குர்ரானை தமிழில் படிக்குமாறு வற்புறுத்திய 11 முஸ்லீம் குடும்பத்தினருக்கு சமூக புறக்கணிப்பு தண்டனைவழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில் வசிக்கும் முஸ்லீம்களில் 11 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அங்குள்ளபள்ளிவாசலில் திருக்குர்ரானை தமிழிலேயே ஓதுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கு மற்ற முஸ்லீம்கள்மறுத்து விட்டனர்.
மேலும் தமிழில் குர்ரானை ஓதுமாறு கூறிய 11 குடும்பத்தினரையும் அவர்கள் தனிமைப்படுத்தி விட்டனர்.அவர்களை எந்த நிகழ்ச்சிக்கும் மற்றவர்கள் அழைப்பு விடுப்பதில்லை.
மேலும் அந்த 11 குடும்பத்தினருக்கும் எந்த விதத்திலும் உதவப் போவதில்லை என்றும் அவர்களுக்கு சமூகப்புறக்கணிப்பு தண்டனை வழங்குவது என்றும் முடிவு செய்து அதை அமல்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக புகார் வந்ததையடுத்து மாவட்ட கோட்டாட்சியர் விசாரணைக்கு ஆட்சித் தலைவர் சுனில்பாலிவால் உத்தரவிட்டுள்ளார்.