விபச்சார தாய், உதவிய மகன் குண்டர் சட்டத்தில் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணும், அவருக்கு உதவியாக இருந்த மகனும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவருக்குத் தொழில் விபச்சாரம் செய்வது. வயதோ 45. இவரது விபச்சாரத்தொழிலுக்கு உதவியாக இருந்தவர் சொந்த மகன் சுதாகர்.
இருவரும் அடிக்கடி போலீஸாரிடம் சிக்கி வந்தனர். மறுபடியும், மறுபடியும் விபச்சாரத்திலேயே ஈடுபட்டு வந்ததால், இருவரையும்குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர காவல்துறை ஆணையர் விஜயக்குமார் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து தாயும், மகனும் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications