For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாலையில் கிடந்த ரூ.50,000: போலீஸிடம் ஒப்படைத்தார் நிருபர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சாலையில் கிடந்த ரூ.50,000 பணம் கொண்ட பையைக் கண்டெடுத்த சென்னை பத்திரிக்கை நிருபர் ஒருவர் அதைப்பத்திரமாகப் போலீஸ் உதவிக் கமிஷனரிடம் ஒப்படைத்தார்.

"மக்கள் குரல்" நாளிதழில் நிருபராக இருப்பவர் குணசேகரன். இவர் சமீபத்தில் இரவு நேரத்தில் கே.கே. நகர்பகுதியில் தனது நண்பரோடு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு முன்பாகச் சென்று கொண்டிருந்த ஒரு பைக்கில் இருந்து ஒரு தோல் பை கீழே விழுந்தது.ஆனால் அதைக் கவனிக்காமல் அந்த பைக்கில் சென்றவர்கள் போய் விட்டார்கள்.

ஆனால் பின்னால் வந்து கொண்டிருந்த குணசேகரன் தற்செயலாக அந்தத் தோல் பை விழுந்ததைப் பார்த்துவிட்டார். உடனே அந்தப் பையை எடுத்துக் கொண்டு அந்த பைக்கைத் துரத்தினார். ஆனால் பைக் வேகமாகச்சென்று மறைந்து விட்டது.

இதையடுத்து மறுநாள் காலை அந்தப் பணப் பையை சென்னை துறைமுகம் உதவி போலீஸ் கமிஷனரிடம்ஒப்படைத்தார் குணசேகரன். அந்தப் பையில் ரூ.50,000 பணம் இருந்தது.

பையைப் பத்திரமாகக் கொண்டு வந்து கொடுத்த குணசேகரனை உதவி போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X