For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரயிலில் மயக்க மருந்து கொடுத்து ராணுவ வீரரிடம் கொள்ளை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

டெல்லியிலிருந்து சென்னை வந்த ராணுவ வீரருக்கு மயக்க மருந்து கொடுத்து அவரிடமிருந்த ரூ. 22,000 பணம் திருடப்பட்டுள்ளது.

ராணுவ டிரைவரான ஜெயப் பிரகாஷ் காஷ்மீரில் பணி புரிந்து வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வருவதற்காக டெல்லி வழியாகதமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை புறப்பட்டார். டெல்லியில் செவ்வாய்க்கிழமை இரவு ரயில் ஏறினார்.

கிளம்பிய சிறிது நேரத்தில் கையோடு கொண்டு வந்திருந்த சாப்பாட்டுப் பொட்டலத்தை எடுத்துச் சாப்பிட்டுள்ளார். அப்போது அருகில்இருந்த இரண்டு பேர், அவருக்கு தண்ணீர் கொடுத்துள்ளனர். அதைக் குடித்தசிறிது நேரத்தில் ஜெயப் பிரகாஷ் மயக்கமடைந்தார்.

அதன் பிறகு வியாழக்கிழமை காலை சென்னை சென்டிரலுக்கு ரயில் வந்து நின்ற பிறகு தான் அவருக்கு மயக்கம் தெளிந்துள்ளது.

பதறியடித்து எழுந்த அவர் தனது சூட்கேஸைத் தேடினார். ஆனால் சூட்கேஸ் இல்லை. அதில் வைத்திருந்த ரூ. 22,000 பணம் திருடுபோயிருந்தது.

வெறுத்துப் போன ஜெயப்பிரகாஷ், ரயில்வே போலீஸில் புகார் கொடுத்தார். பின்னர் தனது சொந்த ஊரான விழுப்புரத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X