நவீன அஸ்ட்ரா ஏவுகணை: இந்தியா சோதனை
பாலாசூர்:
எதிரி நாட்டு விமானங்களை வீழ்த்த போர் விமானங்களில் இருந்து ஏவப்படும் அஸ்ட்ரா என்ற புதிய ஏவுகணையை இந்தியாவெற்றிகரமாக சோதனையிட்டுள்ளது.
இதுவரை அக்னி, பிருத்வி (தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்க), பிரம்மோஸ் (கப்பலில் இருந்து கப்பலைத் தாக்க), நாக்(டாங்கிகளைத் தகர்க்க), திரிசூல் (தரை, கப்பலில் இருந்து செலுத்த), ஆகாஷ் (தரையிலிருந்து விமானத்தைத் தாக்க) ஆகிய ஏவுகணைகளைஇந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சித் துறையான டி.ஆர்.டி.ஓ. வெற்றிகரமாக சோதனையிட்டுள்ளது.
இதில் ஆகாஷ் போதிய அளவில் வெற்றி பெறவில்லை.
இந் நிலையில் விமானத்தில் இருந்து விமானம், ஹெலிகாப்டர்களைத் தாக்கும் அஸ்ட்ரா ஏவுகணை முதல்முறையாகசோதனையிடப்பட்டுள்ளது.
ஒரிஸ்ஸாவில் பாலாசூரில் உள்ள சண்டிபூர் ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் இந்தச் சோதனை நடந்தது.
நேற்று நள்ளிரவு 12.15 மணிக்கு இந்தச் சோதனை நடந்தது.
திட எரிபொருளால் இயங்கும் இந்த ஏவுகணை 25 முதல் 40 கி.மீ. வரை விமானத்தையோ, ஹெலிகாப்டரையோ விரட்டிச் சென்று தாக்கும்seek and destroy தொழில்நுட்பம் கொண்டது.