For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாஜ்பாயை அவமானப்படுத்தியது திமுகதான்: இல.கணேசன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை விமான நிலையத்தில் பிரதமர் வாஜ்பாயை வரவேற்றதுடன் ஜெயலலிதாவின் கடமை முடிந்து விட்டது. ஆனால் வரவேற்கவும்வராமல், விழாவிலும் யாரும் கலந்து கொள்ளாமல் வாஜ்பாயை அவமதித்தது திமுக தலைவர்கள் தான் என்று பா.ஜ.க. அகில இந்தியச்செயலாளர் இல.கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

வாஜ்பாய் கலந்து கொண்ட சென்னை விமான நிலைய விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளாமல் அவமதித்து விட்டார் என்றுதிமுகவினரும், பிற கட்சியினரும் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். இந் நிலையில் திமுகவினர்தான் வாஜ்பாயை அவமதித்து விட்டதாக இல.கணேசன் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது: முதல்வர் என்றமுறையில் விமான நிலையத்தில் பிரதமர் வாஜ்பாயை ஜெயலலிதா வரவேற்று தனது கடமையைசெய்து விட்டார். திமுகவினர் கொடுத்த நெருக்கடி காரணமாகவே, ஜெயலலிதாவுக்கு, விமான நிலைய விழாவில் கலந்துகொள்வதில் சிக்கல் ஏற்பட்டு விட்டது.

ஆனால், வாஜ்பாயை வரவேற்க மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவைத் தவிர வேறு யாரும் வரவில்லை. அதேபோல, விமான நிலைய விழாவிலும் ஒருவரும் கலந்து கொள்ளவில்லை. இதன் மூலம் திமுகவினர்தான் வாஜ்பாயைஅவமதித்துள்ளனர்.

வாஜ்பாயை வரவேற்க, தமிழக அமைச்சர்கள் அனைவரும் வந்திருந்தனர். சென்னை மாநகராட்சி துணை மேயர் வந்திருந்தார். ஆனால்அழைப்பிதழில் பெயர் போடப்பட்டிருந்த தாம்பரம் திமுக எம்.எல்.ஏ வாஜ்பாயை வரவேற்க வரவில்லை என்றார் கணேசன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X