வாஜ்பாயை அவமானப்படுத்தியது திமுகதான்: இல.கணேசன்
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் பிரதமர் வாஜ்பாயை வரவேற்றதுடன் ஜெயலலிதாவின் கடமை முடிந்து விட்டது. ஆனால் வரவேற்கவும்வராமல், விழாவிலும் யாரும் கலந்து கொள்ளாமல் வாஜ்பாயை அவமதித்தது திமுக தலைவர்கள் தான் என்று பா.ஜ.க. அகில இந்தியச்செயலாளர் இல.கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் கூறியதாவது: முதல்வர் என்றமுறையில் விமான நிலையத்தில் பிரதமர் வாஜ்பாயை ஜெயலலிதா வரவேற்று தனது கடமையைசெய்து விட்டார். திமுகவினர் கொடுத்த நெருக்கடி காரணமாகவே, ஜெயலலிதாவுக்கு, விமான நிலைய விழாவில் கலந்துகொள்வதில் சிக்கல் ஏற்பட்டு விட்டது.
ஆனால், வாஜ்பாயை வரவேற்க மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவைத் தவிர வேறு யாரும் வரவில்லை. அதேபோல, விமான நிலைய விழாவிலும் ஒருவரும் கலந்து கொள்ளவில்லை. இதன் மூலம் திமுகவினர்தான் வாஜ்பாயைஅவமதித்துள்ளனர்.
வாஜ்பாயை வரவேற்க, தமிழக அமைச்சர்கள் அனைவரும் வந்திருந்தனர். சென்னை மாநகராட்சி துணை மேயர் வந்திருந்தார். ஆனால்அழைப்பிதழில் பெயர் போடப்பட்டிருந்த தாம்பரம் திமுக எம்.எல்.ஏ வாஜ்பாயை வரவேற்க வரவில்லை என்றார் கணேசன்.