வாடிப்பட்டியில் சிறுமி கொலை: பலாத்காரம் செய்யப்பட்டாள்?
Subscribe to Oneindia Tamil
வாடிப்பட்டி:
வாடிப்பட்டியில் 6 வயது சிறுமி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டாள். அந்தச் சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகிஇருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மதுரை ஜெயில்ரோட்டைச் சேர்ந்தவர் சுந்தர். இவரது மகள் கோமளா. கோடை விடுமுறையையொட்டி வாடிப்பட்டியில் உள்ள தனதுஉறவினரின் வீட்டுக்கு கோமளவை அனுப்பி வைத்தார் சுந்தர்.
உறவினரின் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த கோமளா திடீரென காணாமல் போனாள். அவளை பல இடங்களிலும் தேடிப்பார்த்தனர். அப்போது ஊருக்கு ஒதுக்குப் புறமான பகுதியில் ஒரு புதருக்குள் உடலெங்கும் வெட்டுக் காய்களுடன் கோமளா இறந்துகிடந்தாள்.
அவளை யாரோ பாலியல் பலாத்காரம் செய்துவிட்டுக் கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது. போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.












Click it and Unblock the Notifications