புது மாப்பிள்ளை கடலில் மூழ்கி சாவு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
விழுப்புரத்தில் இருந்து பாண்டிச்சேரி சென்ற புது மாப்பிள்ளை ஒருவர் கடலில் மூழ்கி பலியானார்.
விழுப்புரம் ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் தனபால்.
இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. பாண்டிச்சேரியில் உள்ள அரசுபொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினரைப் பார்க்கச் சென்றார்.
அவரைப் பார்த்து விட்டு குளிக்க கடற்கரைக்குச் சென்றார். கடலில் குளித்துக் கொண்டிருந்த அவர் மூழ்கி விட்டார்.
கல்யாணமான சில நாட்களிலேயே அவர் பலியானது அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications